ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது.
ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன.
இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில்,பல நாடுகள் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.
"உக்ரைனியர்கள் எக்காரணம் கொண்டும் ரஷ்யாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் குடிமக்கள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று கூறியுள்ளது.
எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத குடிமக்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக
டோக்கியோவில் நடைபெறும் 2020 ஒலிம்பிக் போட்டிகளில், குத்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளை குவிப்பதாக பிரித்த
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ
ஆசியா மற்றும் ஆப்ரிக்கா முழுவதும் துறைமுகங்கள் மற்று
ஆப்பானிஸ்தானில் அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், ஆட்ச
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
.
ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த
