96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
ரஷ்ய படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் Volodymyr Zelensky கூறியுள்ளார். நேற்று ஒரே நாளில் புடின் படை உக்ரைன் தலைநகரை கிட்டத்தட்ட சுற்றிவளைத்துவிட்டன.
Chernobyl நகரை தாண்டி சில பகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இன்னும் குறைந்தது ஓரிரு நாட்களில் தலைநகர் கீவ் (Kyiv) ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என கூறப்படுகிறது.
அதன்படி, ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 96 மணிநேரங்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்திற்குள் அரசாங்கம் கவிழ்ந்துவிடலாம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா விரைவில் நகரின் மீது குண்டு மழை வீசும் என்று அரசாங்கம் எச்சரித்ததை அடுத்து, கீவில் உள்ள குடிமக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களை தேடி தஞ்சமடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில், NATO உறுப்பினரான துருக்கி தனது கப்பல்களில் ஒன்று Odessa அருகே 'வெடிகுண்டு' மூலம் தாக்கப்பட்டதாகக் கூறியது. இச்செயல், ஐரோப்பா முழுவதும் போரைத் தூண்டிவிடும் என்ற அச்சத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலக அளவில் கொரோனா தொற்றின் முதல் அலையின் போது அமெரிக்
உலகின் மிகப்பெரிய பொழுதுப்போக்கு பூங்கா வால்ட் டிஸ்ன
ஐ. நா சபையின் ஜெனிவா மனித உரிமைச் சபை அமர்வு ஆரம்பமாகிய
15 நாட்களுக்குள் உக்ரைன் முழுவதையும் கைப்பற்ற ரஷியா
மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே உள்ள புச்சா நகரில் மனித உரி
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதையடுத்து, உலக நாட
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க லொறி சாரதிகளின் ஆர்ப்பாட்டங்களை இரும்புக்கரம் கொண்ட உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கல்வி நிலையமொன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் ச 1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள
