இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர். அவர்களில் ஒருவர் சில பாடல்கள் பாடியதற்காக தடல்புடல் மரியாதை செய்யப்பட்டதுடன் பல கோடி ரூபா பெறுமதியான காணியும் வீடும் அவருக்கு அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அரசாங்கத்தின் மரியாதையையும் வெகுமதியையும் பெற்றவர் தென்னிலங்கையை சேர்ந்த யுவதி யொஹானி டி சில்வா ஆவார்.
அதேசமயம் மற்ற தமிழ் யுவதி கணேஸ் இந்துகாதேவி குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
ஆனால் அவருக்கு எவ்வித தடல்புடல் வரவேற்போ அல்லது வெகுமதிகளோ அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை . குறித்த யுவதி முல்லைத்தீவு மாவட்டத்தின் பிறந்தவராக உள்ளார்.
இந்நிலையில் ஒருவருக்கு பாடல் பாடியதற்காக பரிசும் வீடும் வழங்கி கௌரவித்த இந்த அரசாங்கம் , நாட்டை கௌரவப்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றவருக்கு ஏன் எவ்வித மரியாதையையும் பரிசுகளையும் வழங்கவில்லை என சமூக ஆர்வலர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளானர்.
மேலும் இருவருமே ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் என்கின்ற நிலையில் ஒருவரை பாராட்டி கௌரவப்படுத்திய அரசாங்கம் , மற்றவரை கௌரவப்படுத்த தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.அதேவேளை இதுவரையும், தங்க்கப்பதக்கம் பெற்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவிக்கு அரசாங்கத்தில் இருக்கக்கூடியவர்களோ, அல்லது அந்த துறைசார்ந்த எந்த முக்கியஸ்தர்களோ வாழ்த்துக்களை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.





இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள ஜெனிவா மனித உரிமை
பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனி
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்
