பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் நேற்றைய தினம் சென்றுள்ளார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேற்று நேரடியாக சென்று சந்தித்துள்ளனர். இதன்போது , தங்கம் வென்ற தமிழ் மங்கை இந்துகாதேவியின் தேவைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
கடந்த 18 அன்று பாக்கிஸ்தானில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சின் வடமாகாண திட்ட முகாமையாளர் ஹமினி கொஸ்தா யுவதியின் வீட்டிற்கு சென்று யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் இந்துகாதேவியின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது உறுதியளித்துள்ளனர்.
இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
அமெரிக்காவில் காபி குடிக்க பால் வாங்குவதற்கு மளிகை கட
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ