புலனாய்வுப் பிரிவின் பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் வங்கி பணம் மீளபெறல் இயந்திரத்தில் மறந்து வைத்து விட்டு சென்ற அட்டையை பயன்படுத்தி ஒரு லட்சத்து 16 ஆயிரம் ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த நபர் 13 நாட்களுக்கு பின்னர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நிட்டம்புவை நகரில் உள்ள அரச வங்கி ஒன்றுக்கு கடந்த 14 ஆம் திகதி சென்ற புலனாய்வுப் பிரிவின் பெண் அதிகாரி, அங்குள்ள பணம் மீளபெறல் இயந்திரத்தில் பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர், மறந்து அட்டையை இயந்திரத்திற்குள் விட்டுச் சென்றுள்ளார்.
அட்டையை மறந்து வைத்து விட்டதை உணர்ந்த அவர் மீண்டும் சிறிது நேரத்தில் வங்கிக்கு சென்று இயந்திரத்தை பரிசோதித்த போது அட்டை காணாமல் போயிருந்தது.
இது தொடர்பாக நிட்டம்புவை பொலிஸ் நிலைய குற்றப் பிரிவில் செய்த முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் ஊராபொல பிரதேசத்தில் சந்தேகத்தின் பேரில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த பணம் மீளபெறல் அட்டையை பயன்படுத்தி நிட்டம்புவை நகரில் 74 ஆயிரம் ரூபாவுக்கு செல்போன் கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த நபர் நகரில் உள்ள மற்றுமொரு கடைக்கு சென்று 42 ஆயிரம் ரூபாவுக்கு செல்போனை கொள்வனவு செய்து பணத்தை அட்டை மூலம் பெற்றுக்கொள்ளுமாறு கடை உரிமையாளரிடம் வழங்கியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர
குத்தகை தவணையை செலுத்த அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை
சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக் கொள்வனவில் அரசு பாரி
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமக
அளுத்கம பகுதியில் கடலில் நீராடச் சென்ற சிறுவன் நீரில்
ஜனாதிபதியின் மனைவியான பேராசிரியர் மைத்தி
இலங்கையில் நாளை (09-05-2022) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து ஆ
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவே
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 60 ஆக மாற்றியமையினால் 9 வீ
தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
இராணுவத்தை நோக்கி தாம் சுடவில்லை எனவும், தம்மை நோக்கி
