பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த உபாதைக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிரித்தானியாவில் இருந்து பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் (Prof. Hilali Noordeen) அண்மையில் இலங்கை வந்ததாக தெரியவந்துள்ளது.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் என்பவர் பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான எலும்பியல் மற்றும் முதுகெலும்பு சத்திர சிகிச்சை நிபுணராவார்.
பேராசிரியர் கடந்த திங்கள் கிழமை இலங்கைக்கு வந்துள்ளதுடன் கொழும்பு நவலோக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை செய்துள்ளார்.
பேராசிரியர் நூர்தீனுடன் மேலும் ஒருவர் மயக்க மருந்து நிபுணரும் வந்திருந்ததுடன் பிரதமருக்கு சிகிச்சை அளித்த பின்னர் இருவரும் அன்றிரவே பிரித்தானியாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பேராசிரியர் ஹிலாலி நூர்தீன் இலங்கை வந்து, பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு சிகிச்சை அளித்தமை தொடர்பான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன அண்மையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்.
ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அ
பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச
கொவிட் தொற்றினால் மரணிப்பவர்களின் ஜனாசாக்களை ஓட்டமா
இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஈஸ்டர் பண்டிகையன்று தேவால
மடகஸ்கரில் கடந்த சில வாரங்களுக்கு முன் கைது செய்யப்பட
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை – சக்கோட்டை கடற்கரைப்பகு
இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிச
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடு
கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடா
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
