கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த சிறுவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ராகுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது. சிறுவன் உயிரிழந்த தினத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதாகவும், அன்றைய தினம் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறாது என சிறுவன் தனது தாயிடம் தொலைபேசி ஊடாக கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அன்று மதியம் பலத்த சத்தம் கேட்டதாகவும், சிறுவன் தரையில் வீழந்து கிடப்பதைப் பார்த்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிறுவனின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டொலர் நெருக்கடியால் கொழும்பு துறைமுகத்தில் தேங்கியு
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
கொரோனா வைரஸ் மருந்தினை பயன்படுத்துமாறு எவரையும் கட்ட
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர் போரா
மேல் மாகாணத்தில் விஷேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக
களனி பட்டிவெல பிரதேசத்தின் ஊடாக பயணிக்கும் சாரதிகளுக
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்
இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் தொட
எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும்
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
இவ்வருடம் உள்நாட்டு பால் உற்பத்தி 70 % ஆக அதிகரிக்கப்பட
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
