கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து வீழ்ந்து உயிரிழந்த 15 வயது சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
இதன்படி, குறித்த சிறுவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்தார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த நீதவான் சிலானி பெரேராவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை வைத்திய அதிகாரி விசேட வைத்தியர் ராகுல் ஹக்கினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பிரேத பரிசோதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் நடைபெற்றது. சிறுவன் உயிரிழந்த தினத்தன்று பெற்றோர் வீட்டில் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சிறுவன் கடந்த 28ம் திகதி வெள்ளிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் பாடசாலை முடிந்து வீடு திரும்பியதாகவும், அன்றைய தினம் பிரத்தியேக வகுப்புகள் இடம்பெறாது என சிறுவன் தனது தாயிடம் தொலைபேசி ஊடாக கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த தொடர்மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் அன்று மதியம் பலத்த சத்தம் கேட்டதாகவும், சிறுவன் தரையில் வீழந்து கிடப்பதைப் பார்த்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சிசிடிவி காட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சிறுவனின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்பதற்காக அரசாங்க
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பதவி நீக்கம் செய்ய தயங
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
கடந்த 24 மணித்தியாலங்களில், தனிமைப்படுத்தல் விதிகளை மீ
இந்த வருடத்தின் முதலிரண்டு வாரங்களில் 39,172 சுற்றுலாப் ப
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை ம
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்த
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
குடிசைகள் இல்லாத நாட்டை உருவாக்கி குழந்தைகளின் எதிர்
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுள்ள எந்தவொரு அபிவிருத
நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
