கொள்ளுபிட்டியில் அனுமதிப்பத்திரமின்றி நடத்தப்பட்டு வந்த இரவு நேர களியாட்ட விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் 12 வெளிநாட்டவர்கள் உட்பட 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த களியாட்ட விடுதிக்குள் காணப்பட்ட அனுமதிப்பத்திரம் அற்ற 483 பியர் போத்தல்கள், 6 வைன் போத்தல்கள், உள்நாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 100 சிகரெட்டுக்கள் என்பனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த களியாட்ட விடுதியை வெளிநாட்டு பெண்ணொருவரே நடத்தி வந்துள்ளார். இவர் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தவறை ஏற்றுக் கொண்டதன் பின்னர் , 90 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட சிகரெட்டுக்களை வைத்திருந்தமையை களியாட்ட விடுதியின் முகாமையாளர் ஏற்றுக் கொண்டமையால் அவருக்கு 60,000 அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன் பொது பொலிஸ் ஊடகப் பிரிவு ஏனைய சந்தேகநபர்கள் விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொ
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 43 பேர் உயிரிழந்
விடுதலைபுலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால் த
நாடளாவிய ரீதியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை ஒரு மணித்த
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
கடந்த சில தினங்களில் கோவிட் தடுப்பு செயலூக்கியினை பெற
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
