திருமதி இலங்கை அழகி பட்டம் வென்ற புஷ்பிகா டி சில்வா, தம்மை மிரட்டியதாக பிரபல அறவிப்பாளரும் தொகுப்பாளருமான தானு இன்னிசைத்தம்பி, முறைப்பாடு செய்துள்ளார்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திருமதி உலக அழகி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் தானா ஜோன்சனுடன் அண்மையில் தாம் செய்த நேர்காணல் தொடர்பில் இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி வாயிலாக புஷ்பிகா தம்மை அச்சுறுத்தியதாக தானு தெரிவித்துள்ளார்.
இம்முறை திருமதி உலக அழகி போட்டியின் போது தமக்கு கிடைக்கவிருந்த பட்டத்தை, முன்னாள் திருமதி பிரபஞ்ச அழகி ரோசி சேனாநாயக்க தடுத்து விட்டதாகவும் புஷ்பிகா அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை நடைபெற்ற திருமதி உலக அழகிப் போட்டியில் தாம் 4ம் இடத்தை வென்றதாக புஷ்பிகா முகநூலில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் புஷ்பிகா தம்மை தொலைபேசியில் மிரட்டியதாக தானு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும், முதல் இரண்டு இடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டதாகவும் நான்காம் இடம் வழங்கப்படவில்லை எனவும் திருமதி உலக அழகிப் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் துணைத் தலைவர் ஜோன்சன், தானுவிடம் கூறியிருந்தார்.
தற்போது நாட்டில் அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டத்தை ம
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
அரச ஊழியர்கள் அலுவலகங்களுக்கு கடமைக்காக வருகை தரும் ப
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இம் முறை இலங்கை வி
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோள விதைக
இரண்டு புற்றுநோயாளிகளை ஏமாற்றி அவர்களின் வங்கிக் கணக
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
யாழ்.கோப்பாய் - இராசபாதை வீதியில் அதிகாலையில் வழிப்பற
ராஜபக்ச அரசாங்கத்துக்குள் உள்வீட்டு முரண்பாடுகள்
கிளிநொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியில் நேற்று மாமனாரு
22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன
