கலேவல-வீரகலவத்த பகுதியில் காதலித்த யுவதியை பார்க்கச் சென்ற இளைஞரொருவர் மீது யுவதியின் உறவினர்களால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 28ம் திகதி ஹொரவ்பொத்தானை பிரதேசத்திலிருந்து இரண்டு வருடமாக பழகிய யுவதி வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததையடுத்து பார்வையிட சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அங்கு யுவதியின் உறவினர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் தனது தலை முடியை வெட்டி தனக்கு காயம் ஏற்படுத்தியதாகவும் தெரிவித்து ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் ஹொரவ்பொத்தானை- நிக்கவெவ சேர்ந்த கபூர் முகம்மட் சாகீர் (19வயது) எனவும் தெரியவருகின்றது.
இதேவேளை குறித்த தாக்குதல் நடத்தியவர் குறித்த பெண்ணின் தந்தை எனவும் அவருடன் பக்கத்து வீட்டார் இருவரும் சேர்ந்து தன்னை தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட இளைஞர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தாக்குதல் நடாத்திய குறித்த யுவதியின் தந்தையை தொடர்புகொண்டு கேட்டபோது இரவு நேரத்தில் தனது வீட்டுக்கு வந்து கதவை தட்டியதாகவும் இதனாலேயே தாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டார் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஹொரவ்பொத்தானை வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
லங்கா சதொச நிறுவனம் 10 வகையான பொருட்களின் விலைகளை குறைத
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் மனித உரிமை மீறல்களில் ஈடு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், தமது ஆதரவை இலங
நாளை (மார்ச் 15) ஆரம்பமாகவிருந்த தவணைப் பரீட்சைகளை பிற்
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
கப்பிடல் மகாராஜா குழுமத்தின் தலைவர் ஆர்.இராஜமகேந்திர
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற வருகை சட்ட விரோதமானது அல
நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதிய
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்ம
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆளும் கட்சிய
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
ஜயந்த கெட்டகொட சற்றுமுன்னர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அ
வவுனியா வடக்கு, சின்னடம்பன் பகுதியில் நேற்று மாலை (10) யா
