சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப்பிப்பதற்கும் மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள வந்த 1213 பேரில் 145 பேர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் அறிக்கைகளினால் இந்த தகவல் வெளியாகியுள்ளதாகவும் போதைப்பொருள் பாவிக்கும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இந்த வாரம் முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இவர்களில் பெரும்பாலானோர் லொறி சாரதிகள் எனவும் அவர்களில் 21 பேர் பஸ் சாரதிகள் எனவும் இது ஆபத்தான நிலை ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கு கிடைத்த தகவல்களின்படி, போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு அதிகரித்து கொண்டே செல்கிறது . போதைப்பொருள் பாவனையில் இதுவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ள போதிலும், போதைப்பொருள் சாரதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாமையால் வீதிப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் போதைக்கு அடிமையான சாரதிகளும் போதைக்கு அடிமையானவர்களும் பிடிபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.
வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது
சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n
இஸ்லாமிய பாட புத்தகங்களில் காணப்படும் அடிப்படைவாத வி
இலங்கை மின்சார துறையின் தொழிற்நுட்ப பிரிவுகளில் பல ஆண
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள
அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் ந
2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட் சையி
யாழ்ப்பாணம் பொது நூலக சிற்றுண்டி சாலை, யாழ்.நீதிமன்ற உ
இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில
இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக
யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி
எரிபொருள் விநியோக நடவடிக்கைக்கு எந்தவித இடையூறும் ஏற
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கா
