யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் உதவி விரிவுரையாளர் மறைந்த தில்காந்தி நவரட்ணத்தின் இறுதிக் கிரியைகள் மொனராகலை மரகலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் கடந்த செய்வாய்கிழமை உயிரிழந்தார்.
அதிகாலை 5 மணி அளவில் சுகயீனம் காரணமாக மொனராகலை, சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி உயிரிழந்துள்ளார். ஆறு மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றிலிருந்த அவர் யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் கல்வி கற்று, தற்காலிக உதவி விரிவுரையாளராக தெரிவாகியிருந்தார்.
அத்துடன் செய்தி வாசிப்பு மற்றும் நிகழ்ச்சிகளை தொகுத்தளித்தல் போன்ற துறைகளிலும் அவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்டிருந்தபோதே தமது திறமையை அவர் வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பி அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என் இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த 8.6 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பள்ளி பேருந்து அளவுள கொரோனா தடுப்பூசி செலுத்திய நீரிழிவு நோயாளிகளுக்கு மு பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும். ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
