இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தி வந்த ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று இலங்கை கடல் எல்லையில் வைத்து கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் கொழும்பு கடற்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி ரி.ஏ.டி.ஏ.ரி. சுபோதவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் எல்.கே.டபிள்யூ.கமல் சில்வாவின் பணிப்புரைக்கமைய மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சுகத் மாசிங்காவிலன் வழிகாட்டலில் காவல்துறை குழுவினர் கடற்படையுடன் இணைந்து, சுமார் 15 தினங்களுக்கு மேலாக இரவு பகலாக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே ஈரானில் இருந்து போதைப் பொருளை கடத்திவந்த கப்பலை கடலில் வைத்தே வழிமறித்துள்ளனர். இதன்போது, சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை, கடத்தல்காரர்கள் கடலில் தூக்கி போட்டுள்ளனர்.
இதன் போது, ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர், அவர்களுடைய பாவனைக்காக வைத்திருந்த போதைப்பொருள் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்னும் சில நாட்களில் மனிதனை மனிதன் பிடித்து உண்ணும்
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
இலங்கை பன்மைத்துவ நாடு என்ற நிலைக்கு சட்டப்படி மாறுவத
லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைய
விவசாயிகள் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கும், அ
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மல
ஜப்பானில் தடுப்புக் காவலில் உயிரிழந்த இலங்கைப் பெண்ண
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
“அவன்கார்ட் கனரக ஆயுதம்” என முட்டைக்கு பட்டப்பெயர
மாத்தறை - பிலதுவ பிரதேசத்தில் நேற்று கிராமத்திற்குள்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை
