ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்துக்கு அருகில், இன்று தம்பதிகளான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சுரங்கத்துக்கு அருகில் முதலில் யுவதி தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்து, பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து பாய்ந்த இளைஞரும் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த இளம் தம்பதியினரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து காயமடைந்த தம்பதியினர் அதே புகையிரதத்தில் ஹப்புத்தளைக்கு கொண்டுவரப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தின் கதவு பகுதியில் நின்றவாறு, மேற்படி யுவதி செல்ஃபி எடுக்க முயன்றபோது, தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
2022 ஆம் ஆண்டில் சுமார் 690 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்
வவுனியா உட்பட நாடு முழுவதும் மூன்று நாட்கள் பயணத்தடை
காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத த
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் பிக்கப் ரக வாகனமு
மனித உரிமைகள் என்ற காரணத்தைக் காட்டி மேற்குலக நாடுகள்
முனிதாச குமாரதுங்க கல்லூரிக்கு அருகில் பேருந்தில் இர
இந்த அரசாங்கம் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்ட
பெலியத்தவிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த ரயி
தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
நாடாளுமன்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் பெற்றுக்க
யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் 08 லீட்டர் கசிப்பு &nbs
வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய சுகாதார நியதிச் சட்டத்து
ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின
இலங்கையில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றை கட்டுப்படு
