ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள சுரங்கத்துக்கு அருகில், இன்று தம்பதிகளான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இருவர் புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தம்பதியினர், கொழும்பிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, சுரங்கத்துக்கு அருகில் முதலில் யுவதி தவறி வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயற்சி செய்து, பயணித்துக்கொண்டிருந்த புகையிரதத்தில் இருந்து பாய்ந்த இளைஞரும் காயமடைந்து தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸைச் சேர்ந்த இளம் தம்பதியினரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
புகையிரதத்தில் இருந்து வீழ்ந்து காயமடைந்த தம்பதியினர் அதே புகையிரதத்தில் ஹப்புத்தளைக்கு கொண்டுவரப்பட்டு, நோயாளர் காவு வண்டி மூலம் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புகையிரதத்தின் கதவு பகுதியில் நின்றவாறு, மேற்படி யுவதி செல்ஃபி எடுக்க முயன்றபோது, தவறி விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ர
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய
கண்டி மாநகர எல்லைப் பகுதியில் உள்ள மஹியாவை பகுதியின்
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாள
சமூக சேவைகள் போன்ற பொது விடயங்கள் ஒரு அமைச்சின் கீழ் இ
பண்டாரவளை - எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் ப
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
கொழும்பில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு முன்ன
இலங்கையிலுள்ள அதிகளவான குடும்பங்கள் தமது உணவிலிருந்
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் தமது சிறப்புரிமை ம
ராஜபக்ச&n
இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் 27 அத்தியாவசிய பொ
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் மனைவியின் முன்னிலையில
வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் 35 பேரை பொலிஸார் கைது செய்த
