எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம், சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 4 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்குமாறு, நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர் நால்வரும், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து கடல் தொழிலுக்கு சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழில் ஈடுபட்டதாகக்கூறி, அவர்களைக் கைது செய்தமை சட்டத்திற்குப் புறம்பானதாகும். எனவே, சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் நால்வரையும் விடுவித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு
திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர்
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளி தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு எழுவர் விடுதலையில் முடிவெடுக்க தனக்கு அதிகாரமில்லை எ இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்க மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்ப கொரோனா இரண்டாவது அலையை சமாளிக்கும் வகையில் புதுச்சேர இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்க ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி. இவரபுதுக்கோட்டையில் தேமுதிக
