14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது.
இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெற்ற கோப்பைக்கான இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜேக்கப் 2 ஓட்டங்களிலும், கேப்டன் டாம் பிரஸ்ட் ஓட்டம் ஏதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினர்.
ஜேம்ஸ் ரீவ் ஒருபுறம் போராட, மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட்டாகினர். இதையடுத்து ஜேம்ஸ் ரீவுடன், ஜேம்ஸ் சேல்ஸ் கைக்கோர்த்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் திரட்டினர். ஜேம்ஸ் ரீவ் 95 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில் இங்கிலாந்து அணி 44.5 ஓவர்களில் 189 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் ராஜ்பவா 5 விக்கெட்டுகளையும், ரவிக்குமார் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களாக அங்கிரிஷ் டக்-அவுட்டாகி ஷாக் கொடுத்தார். முதல் ஓவரிலேயே விக்கெட் சரிந்ததால் பதற்றத்துடன் தொடங்கியது இந்திய அணி.
அடுத்து களமிறங்கிய ஷேக் ரசீத் நிதானமாக விளையாடி அரை சதம் கடந்தார். அவரை அடுத்து களமிறங்கிய நிஷாந்த், அவர் பங்கிற்கு 50 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம
புதுச்சேரி முதல் மந்திரி ரங்கசாமி கடந்த மே மாதம் 9-ம் த
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 100 சதவீ
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்
பஞ்சாப்பில் ஆட்சியை பிடிக்க ஆம் ஆத்மி போன்ற எதிர்க்கட
லட்சத்தீவு மக்களின் வாழ்க்கை,
