வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான காரணம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மூவரும் சென்றுள்ளனர்.
மாத்தறையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்கள் குடிபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
Youtube இல் பதிவிடப்பட்டிருந்த காணொளி ஒன்றின் தகவலுக்கமைய வீதியை தேடி இந்த இடத்திற்கு இந்த குழுவினர் சென்றுள்ளனர்.
இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த எல்லவல பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எப்படியிருப்பினும் அதற்காக தடை செய்யப்பட்ட பதாகை காணப்பட்ட போதிலும் உத்தரவை மீறி சென்றமையினால் இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையில் அதிகரித்து வர
13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட் மகிந்த ராஜபக்ச தனது 2 பதவிக்காலம் முடிவடைந்ததும் ஓய்வ நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள நுவரெலியா மாவட்டத்தில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
