கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள சிதம்பரம் விடுதி கட்டிடத்தில் வேலைதேடும் நபர்களுக்கும், வேலை தரும் தொழில் நிறுவனங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்திவைத்தார்.
தனியார் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் "பாலம்" திட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி கரூர் மாவட்டத்தில் உள்ள டெக்ஸ்டைல் கொசுவலை பேருந்து கட்டுமானம் உள்ளிட்ட நிறுவனங்களில் உள்ள 4000 பணியிடங்களை நிரப்பும் வகையில் தனியார் வேலைவாய்ப்பு இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தனியார் துறையில் வேலை தேடும் நபர்களான 25 இளைஞர்களுக்கு, 5 நிறுவனங்களின் உதவியுடன் மேடையிலேயே வேலைவாய்ப்பை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். 

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் செந்தில்பாலாஜி - கரூர் மாவட்டத்தில் உள்ள 4000 காலிப்பணியிடங்களை தனியார் நிறுவனங்கள் உதவியுடன் நிரப்பப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் பயிற்சி வகுப்புகள் செயல்படுத்தப்பட உள்ளன. வேலை தேடும் அனைவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் இந்த "பாலம்" திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கிய நாளாக இந்நாளை கருதுகிறேன். இதேபோல் "அனைவருக்கும் இல்லம்" என்ற திட்டத்தையும் முதல்வர் உதவியுடன் விரைவில் கரூர் மாவட்டத்தில் செயல்படுத்த இருக்கிறோம். இந்த இரண்டு முக்கிய திட்டங்களும் சிறப்பாக செயல்பட உள்ளன என்று தெரிவித்தார்
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர்
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை தொடர்பாக, சட்டசபை
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள்
அடுத்த சில மணிநேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழை பெய்யக்
முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத
குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் உள்ள ஒரு கடையில் ஆமை ஓ
காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு
தமிழ்நாடு கூட்டுறவு நியாய விலைக்கடை அனைத்து தொழிற்சங
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வ
விசாரணைகளின் குறைப்பாடுகளை கூறி காலத்தை வீணடிக்காது
பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத
உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் முஸ்லிம் ராஷ்ட்ர
நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சி
