உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுக்கு உதவ தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார் ஏஞ்சலினா ஜோலி, மேலும் சமீபத்தில் அகதிகளுக்கான உதவிகளை வழங்குவதற்காக அங்கு சென்றுள்ளார். ஏமனின் தற்போதைய நிலைமையை வெளிச்சம் போட்டு வெளியுலகிற்கு காட்டும் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். நடிகை ஏஞ்சலினா ஜோலி தனது பதிவில் "இது உலகின் மிக மோசமான பிரச்சனைகளில் ஒன்று" என்று குறிப்பிட்டுள்ளார். ஏஞ்சலினா ஜோலி ஐக்கிய நாடுகளின் அகதிகள் முகமையுடன் (UNHCR) உதவிகளை வழங்குவதற்காக பணியாற்றி வருகிறார். இன்ஸ்டாகிராமில், ஏஞ்சலினா ஜோலி ஏமனின் நிலைமையை வெளியுலகின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துள்ளார்.அவர் பதிவில், "நான் ஏமனில் தரையிறங்கினேன், இடம்பெயர்ந்த குடும்பங்கள் மற்றும் அகதிகளை சந்திக்கவும், ஏமன் மக்களுக்கு எனது ஆதரவைக் வழங்கவும்.
என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். என்னை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், நான் உங்களுக்காக இங்கேயேதான் இருக்கிறேன்." என்று அவரது பதிவில் எழுதியுள்ளார். ரஷ்யா உக்ரைன் மோதல் நடைபெறும் நிலையில், ஏமனின் நிலைமைகளில் ஒன்றும் பெரிய வித்தியாசம் வந்துவிடவில்லை என்று ஏஞ்சலினா ஜோலி கூறியுள்ளார். அதன்மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஏமன் பக்கம் திரும்பியுள்ளார், அது மட்டுமின்றி அவர்களுக்காக உதவுவதற்கு தான் இருப்பதாக முன்னிலையில் நிற்கிறார். ஏமனின் நிலைமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய ஏஞ்சலினா ஜோலி, இது உலகின் மிக மோசமான கொடுமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.