உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்புக்களை அந்தநாட்டின் இராணுவம் தாக்கி அழித்துவரும் காணொலி வெளியாகி தற்போது பகிரப்பட்டு வருகின்றது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய தனது போரை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்னும் தலைநகர் கீவ்வை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்ய இராணுவ துருப்புகள் திணறி வருகின்றனர்.
மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையிலும், போரை நிறுத்துவது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.
ரஷ்யாவின் இந்த தாக்குதல் மனோபாவத்திற்கு உலகளவில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் பெரும்பாலான உலகமக்கள் உக்ரைனிக்கு ஆதரவான குரல்களையும், உக்ரைன் இராணுவத்தின் தடுப்பு தாக்குதல் வெற்றிகளை தங்களின் வெற்றியை போல் கொண்டாடியும் வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நிக்கோலேவ் நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ துருப்புகளை அந்தநாட்டின் விரைவு தாக்குதல் படை தாக்கி அழிக்கும் காணொலி ஆதாரங்களை அந்த நாட்டு இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதேப்போல, உக்ரைனின் மற்றொரு பகுதியில் நுழைந்த ரஷ்ய இராணுவ துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் இராணுவம் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிவருகிறது.
சூரியனுக்கும், புவிக்கும் இடையே ஒரே நேர்க்கோட்டில் நி
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து ச
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த
இந்தியாவில் சமூக ஊடகங்கள் மற்றும் ஓ.டி.டி., தளங்களுக்கு
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றதற்கு சீனா வாழ
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப
பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஒவ்வொ
நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில்,
தெற்கு உக்ரைனில் இருந்து சபோரிஜியா வரையுள்ள பகுதிகளி
போர் நிறுத்தத்தை மீறி ரஷ்யா தொடர்ந்தும் தாக்குதல் நடத
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்
உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்
