ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. விடாமல் வெளுத்து வாங்கும் மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது கனமழை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்காங்கே வெள்ளநீர் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சிட்னியின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளனர். மாரிக்வில்லே பகுதியில் காலையில் ஜாக்கிங் சென்ற ஹாரி ஹேய்ஸ் என்பவர் சாலையில் ஒரு வித்தியாசமான உயிரினத்தை பார்த்துள்ளார்.
இந்த உயிரினம் முட்டை வடிவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கண்ணும், யானைக்கு இருப்பது போல தும்பிக்கை இருந்துள்ளது.
இது பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான உயிரினம் போல் இருந்தது. உடனே, கீழே கிடந்த இந்த உயிரினத்தை ஒரு குச்சியால் ஹாரி அசைத்துப் பார்த்தார். ஆனால், அந்த உயிரினம் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து, அந்த உயிரினத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஹாரி, சாலையில் கண்டேன்.. இது என்ன? என்று கேட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நிறைய பதில்கள் கொடுத்து வருகின்றனர். நிறைய பேர் இது ஏலியன்தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த உயிரினம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
2021-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பருவநிலை ஆ
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அ
உக்ரைனுக்கு அமெரிக்கா படைகளை அனுப்பாது என்று அமெரிக்
ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
உலகளவில் செவி திறன் பிரச்சனையால் பலர் பாதிக்கப்பட்டு
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம
ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீ
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள
