நெல்லை மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் கலைச்செல்வன். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் இரவு பணகுடி ஊருக்கும் இருக்கும் ஒரு பெட்ரோல் பங்கிற்கு, பெட்ரோல் போடுவதற்காக தனது பைக்கை எடுத்து வந்துள்ளார்.
அப்போது, அந்த இடத்தில் 5 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த கலைச்செல்வன் அவர்களிடம் ஏன் இப்படி தகராறு செய்கிறீர்கள் என்று தட்டிக் கேட்டுள்ளார்.
அப்போது, அந்த கும்பலுக்கும், கலைச்செல்வனுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. பிறகு கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் கலைக்செல்வனை பயங்கரமாக தாக்கியது. இந்தத் தாக்குதலில் அவர் ரத்தக் காயத்துடன் மயங்கி கீழே விழுந்தார்.
இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. கலைச்செல்வனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கலைச்செல்வனை கொலை செய்த பணகுடி கோரி காலனியை சேர்ந்த கொலையாளிகள் மணீஷ் ராஜா, ஆட்டோ குமார், பாலசுப்பரமணியன், சிவா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மாணிக்கராஜா என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள
அதிமுக ஒருங்கிணைப்பாளரும் , துணை எதிர்க்கட்சித் தலைவர
சமூகவலைதளமான
நாடுமுழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 72,330 பேருக்கு புதிதா குஜராத் பிரிவை சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் அ கொரோனா வைரசுக்கு எதிரான உலகின் மிகப்பெரிய தடுப்பூசி த கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து
சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அன மகாராஷ்டிராவில் உருமாறிய
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் துபாய் எக்ஸ்போவில் பங்கேற்க அரசு முறை பயணமாக சென்னையி கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
