உக்ரைனை தன்வசமாக்கும் நோக்கில் அந்த நாட்டின் மீது ரஷியா தொடுத்து வரும் போர் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது.
உக்ரைன் நகரங்கள் மீது ரஷிய படைகள் பேரழிவு தாக்குதல்களை நடத்தி வரும் அதே வேளையில், கடந்த சில நாட்களாக மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்து வருகிறது.ஆனால் எந்த ஒரு போர் நிறுத்தமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததுதான் சோகம்.
போர் நிறுத்தத்தை கடைப்பிடிக்க முடியாத சூழலுக்கு இருநாடுகளும் ஒன்றை ஒன்று குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால் இதில் பாதிக்கப்படுவது மக்கள்தான்.
இந்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
மரியுபோல் நகரத்தின் கவுன்சில் சமூக வலைத்தளத்தில் இது தொடர்பான பதிவு வெளியிடப்பட்டது. அதில், மிகப்பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் விளோடிமிர் ஜெலன்ஸ்கி(Vladimir Zhelensky) வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “ இடிபாடுகளுக்குள் குழந்தைகள்,மக்கள் சிக்கியுள்ளனர்.
இது மிகப்பெரும் கொடுமை” எனப்பதிவிட்டுள்ளார். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடப்பதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன் அல் ஜசீரா ( Al Jazeera) செய்தி நிறு
ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்ப
ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர
சீனாவில் 133 பேருடன் பயணித்த விமானம் விழுந்து விபத்துக்
96 மணி நேரத்தில் கீவ் வீழ்ந்துவிடும் என்றும், ஒரு வாரத்
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி ஆப்கானிஸ்தானில் சமீபகாலமாக தலீபான் பயங்கரவாதிகள் அர கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர் தடுப்பூசி பயன்பட பிரித்தானியாவில் பத்து மில்லியன் மக்கள் தற்போது கொரோ உக்ரைனுடனான போரில் தங்கள் படையினர் கொல்லப்பட்ட எண்ணி உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள இந்த நூற்றாண்டின் விதியை தீர்மானிக்க போகும் மிகப்பெர ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும
