இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் 'மித்துறு பியஸ' ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலவச சேவை வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.
சில நிலையங்களில் வார இறுதி நாட்களில் சேவை வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள 80 வைத்தியசாலைகளில் மித்துறு பியஸ மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேவையினை ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகவும் பெண்கள் குறித்த சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 070-261-11-11 என்பதாகும். 24 மணிநேரமும் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்ட ப
அமெரிக்க டொலர்களில் சுங்கத் தீர்வையை செலுத்தி வாகனங்
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக குற்
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுர்ச்சி பேரணி&
அடுத்த 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் பல த
நாட்டில் தமிழ் மக்களுக்கென்று பிரச்சினைகள் எதுவும் இ
சதொசயில் பொருட்களைக் கொள்வனவு செய்யும்போதுஇ சிவப்பு
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் தமிழின படு
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கட
நான் ஒருபோதும் பதவியிலிருந்து இராஜிநாமா செய்யமாட்டே
இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது
மன்னார் மாவட்டச் செயலகத்தின் 2022 ஆண்டுக்கான வாணிவிழா ந
ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்
தமிழீழ விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு
