இலங்கையில் வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட அல்லது வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் பெண்களுக்கு சுகாதார அமைச்சின் கீழ் 'மித்துறு பியஸ' ஆலோசனை சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் இலவச சேவை வழங்கப்படுவதுடன், சேவை நாடுபவர்களின் இரகசியத் தன்மையைப் பாதுகாக்கப்படுவதுடன், பிரச்சினைகளில் இருந்து விடுபட உயரிய சேவை வழங்கப்படுமென பொதுச் சுகாதார விசேட வைத்திய நிபுணர் நேத்ராஞ்சலி மாபிட்டிகம அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரச வைத்தியசாலைகளில் வாரநாட்களில் காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணி வரை இந்தச் சேவை வழங்கப்படும்.
சில நிலையங்களில் வார இறுதி நாட்களில் சேவை வழங்கப்படும். நாடளாவிய ரீதியில் உள்ள 80 வைத்தியசாலைகளில் மித்துறு பியஸ மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சேவையினை ஏனைய பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தொலைபேசி வாயிலாகவும் பெண்கள் குறித்த சேவை நிலையத்துடன் தொடர்பு கொண்டு ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கான தொலைபேசி இலக்கம் 070-261-11-11 என்பதாகும். 24 மணிநேரமும் இந்த தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு
அமெரிக்கா சென்றிருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்ச
கொழும்பில் நள்ளிரவு நேரங்களில் இளைஞர்களை கொடூரமாக தா
ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர
கந்தளாய் - அக்போபுர பகுதியில் ரயில் தடம் புரண்டதில் 16 ப
இலங்கையில் மேலும் 13 கொரோனா மரணங்கள்- நாட்டில் பதிவாகும
யாழில் இருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கி.க
இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட ஒக்ஸ
இலங்கைக்கு தொடர்ந்தும் கடன் வழங்குவதை தவிர்ப்பது குற
தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர்
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும்
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
