போலந்து எல்லைக்கு அருகில், உக்ரைன் இராணுவ தளத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் குறித்த இராணுவ தளம் முற்றாக நிர்மூலமானது.
உக்ரைனிலிருந்து போலந்துக்கு தப்பிச் செல்ல மக்களால் பயன்படுத்தப்படும் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இதில் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
லீவிவ் நகருக்கு வெளியில் உள்ள இராணுவ தளத்தில் ரஷ்யா 30 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
தாக்குதல் நடந்து பல மணி நேரங்களுக்கு பிறகும் அவசர ஊர்திகள் சம்பவ இடத்திற்கு தொடர்ந்து செல்கிறது. அதிகாரிகள் அங்கே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் 19 வயது மாணவர் டக்னிச் விடாலி, ஏவுகணை தாக்கியதும் வானம் சிவப்பாக மாறியதாக தெரிவித்தார்.
"வெடிப்பு சத்தத்தை கேட்டு நாங்கள் தூக்கத்திலிருந்து எழுந்தோம். அது மிகவும் அச்சமாக இருந்தது" என்றார் விடாலி.
அதுமட்டுமல்லாமல் தனது 25 வயது உறவினர் அந்த இராணுவ தளத்தில் பயிற்சியில் இருந்ததாகவும், தற்போதுவரை தனது குடும்பத்தால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட
மேற்கத்திய நாடுகள் வழங்கிய அதிநவீன ஆயுதங்களை கொண்டு,
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத
சீன கம்யூனிஸ்டு கட்சியின் 100-வது ஆண்டு விழா இன்று கொண்ட
தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு
கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர், இளவரசர்
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் அடிக்கடி நடந
உலகிலேயே சக்திவாய்ந்த அரச குடும்பங்களில் ஒன்றான இங்க
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா தொடர்ந்து பல்வே
