யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் பொலிசார் சந்தேகநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி, பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமாகினார். இளைஞனாக அறிமுகப்படுத்திய அந்நபர், மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக ‘சோகக்கதையை’ அவிழ்த்து விட்டதுடன் காதல் முன்மொழிவையும் வைத்த நிலையில் மூதாட்டியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பரிசுப்பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டு, அதற்காக செலுத்த பணம் கடன் தருமாறு இளைஞன் கேட்டதற்கிணங்க, அவர் வழங்கிய வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர், வேறு காரணங்களை குறிப்பிட்டும் பணம் கேட்க, காதல் மயக்கத்தில் அந்த பணங்களையும் மூதாட்டி வைப்பிலிட்டு விட்டார். இவ்வறு 3.5 இலட்சம் ரூபா பணத்தை காதலனுக்காக வைப்பிட்ட பின்னர் காதலன் அல்வா கொடுத்து விட்டார்.
இதனையடுத்து காதலனின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் சந்தேகரபரை தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகின்றது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள
மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை
யாழ்ப்பாணத்தில் பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதி வா
'குருந்தூர்மலை பிரச்சினை உள்ளிட்ட தமிழ் மக்களின் மு
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
பாணந்துறையில் உள்ள உணவகம் மற்றும் விடுதி ஒன்றில் தி
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
மன்னாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (31) முதல் மீன்பிடிப் ப
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை கட்டாயம
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, எந்தவித அனுபவமோ,
ராஜபக்ஷர்கள் மீதான மக்களின் வெறுப்பை ஜனாதிபதி திட்டம
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உ
