தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்து லட்சம் செலவு செய்து தம்பியின் மெழுகு சிலையில், மகளை வைத்து காது குத்து்ம் விழாவினை நடத்தியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வசிப்பவர் சவுந்தரபாண்டி மற்றும் பசுங்கிளி தம்பதிகள். இவர்களுடைய மகன் பாண்டித்துரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பாண்டித்துரையின் மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள், மகனுக்கு காதணிவிழா ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்றது. இறப்பதற்கு முன்பு தனது மடியில் வைத்து தான் காது குத்த வேண்டும் என்ற ஆசை தாய்மாமன் பாண்டித்துரைக்கு இருந்துள்ளது.
தனது குழந்தைகளுக்கு தாய்மாமனான பாண்டித்துரை இறந்து போனதால் அவரைப் போன்றே மெழுகு சிலையினை உருவாக்கி, மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தியுள்ளார்.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தினால் தனது தம்பியின் நீண்ட நாள் விரு்பத்தினை நிறைவேறியதாக கூறும் அவரது அக்கா, இதற்காக ஐந்து லட்சம் செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வடபகுதி கடற்றொழிலாளர் சம்மேளனங்களின் கோரிக்கையை அடு
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப
பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட
சென்னை புறநகர் பகுதிகளுக்கு கூடுதல் மின்சார ரெயில்கள
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
குறுவை நெல் சாகுபடி தொகுப்பு திட்டத்தை முதலமைச்சர் <
மும்பை காங்கிரஸ் தலைவராக பாய் ஜக்தாப் கடந்த டிசம்பர்
தீபாவளி விடுமுறை முடிந்த நிலையில் மீண்டும் சென்னைக்க
இமாசல பிரதேசத்தின் சிர்மார் மாவட்டத்தில் பேக் பசோக் க
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங
