இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதனாத்தில் நடைப்பெற்று வருகிறது.
கடந்த 12ம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இரண்டாம் நாள் முடிவிலேயே கிட்டத்தட்ட போட்டி முடியும் நிலைக்கு வந்து விட்டது.
இலங்கை அணிக்கு 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இரண்டு விக்கெட் இழப்புக்கு போராடி வருகிறது.
மூன்றாவது நாளான இந்திய அணி அபார வெற்றி பெறும் என்றே கூறலாம்.
இந்த நிலையில், போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாக பரவி வருகிறது.
அதில் ரோகித் சர்மா சிக்ஸர் விளாசும் போது பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் என்கிற பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தபோது அவரின் மூக்கின் மீது பந்து பதம் பார்த்தது.
இதனால் அவருக்கு ரத்தம் கசிய உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதன் பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் அவருக்கு மூக்கில் உள்ள எலும்பில் சற்று முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது சில தையல்களும் போடப்பட்டுள்ளதாக ஹோஸ்மாட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அஜித் பெனடிக் ரயான் அந்த ரசிகரின் காயம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
ஐ.பி.எல். 2022 டி20 தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர
இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி ப
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் நேற்றுடன் லீக் ச
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந
டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தா
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் 17ஆவது போட்
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
