சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ்ய எல்லையில் இராணுவ பயிற்சியை முன்னெடுத்துள்ளது நேட்டோ நாடுகள்.
உக்ரைன் -ரஷ்யா போர் நான்கு வாரங்களை எட்டியுள்ள நிலையில், நேட்டோ நாடுகள் நோர்வேயில் இராணுவ பயிற்சியை துவங்கியுள்ளனர். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் உள்ள 25கும் மேற்பட்ட நாடுகள் குறித்த பயிற்சியில் களமிறங்கியுள்ளன.
மொத்தம் 30,000 துருப்புகள், 200 விமானங்கள், 50 போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ரஷ்ய எல்லையில் இருந்து சில மைல்கள் தொலைவில் நடத்தப்படும் மிகப்பெரிய நேட்டோ இராணுவப் பயிற்சியானது உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.
ஆனால், தற்போதைய சூழலில் இந்த நிகழ்வானது முக்கியத்துவம் கொண்டதாக பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சியானது நார்வே மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என நார்வே நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் Odd Roger Enoksen தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முன்னெடுக்கப்படும் இந்த பயிற்சியானது எதிர்வரும் ஏப்ரல் 1ம் திகதி முடிவுக்கு வரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரை மீது மூன்றாவது நாளாகவும் ரஷ்யா தாக்குதல் நடத
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலங்கையர்களி
