ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
ரஷ்யா தனது தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஏவுகணைகள் மூலம் அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரங்களில் ரஷ்யா பல முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் தற்போது முக்கிய தொழிற்சாலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்ய படைகள் அழித்தன. கார்கிவ் நகரில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளதுடன், இரண்டு தடவை மிக சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டுள்ளதுடன்,இன்று அதிகாலையும் தலைநகர் கீவ்வில் 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு பல நாடுகள் மறைமுகமாக பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொடுத்து வருகின்றன. இதுவரை சுமார் 20 ஆயிரம் ஆயுதங்களை உக்ரைன் வெளிநாடுகளில் இருந்து பெற்று எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
குறிப்பாக சிறிய ரக ஏவுகணைகள் மூலம் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த சிறிய ரக ஏவுகணைகள் ரஷ்ய படைகளை அதிகளவு அழித்துள்ளதுடன், இதனால் ரஷ்யா படைகள் திணறி வருவதாக சர்வதேச போர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
உலகளவில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்ப
போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர
கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்ப
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாக
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய ப
மடகஸ்காரில் இன்று இடம் பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச
உக்ரைனிய படைகள் கெர்சனின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க
உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு