தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சமாக இருந்தது.
இந்த நிலையில் தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு ஒமைக்ரான் வைரஸ் பரவலால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில் நேற்று முன்தினம் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருந்தனர். தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சியோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹாங்காங் நாட்டிலும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து இருக்கிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
வியட்நாமில் நேற்று ஒரே நாளில் 1.63 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச
ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பசோ. அந
தமக்குரிய கடமைகளை செவ்வனே செய்து முடித்ததாக அமெரிக்க
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் ந
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரில
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் உருவான கொரோனா பாதிப்பு இன்ன
உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ்
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக,
ஆப்கானிஸ்தான் நாட்டின் பதக்ஷான் மாகாணத்தில் ரகீஸ்தா
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய
மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர
நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர
