உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ரஷ்யா தோல்வி கண்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் மரியுபோல் திரையரங்கின் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகனை வீச்சு காரணமாக அந்த அரங்குக்குள் சிக்குண்டவர்களை மீட்கும் பணி இன்னும் தொடர்கிறது.
இதற்காக உக்ரைன் மற்றும் ரஷ்ய படையினருக்கு இடையிலான வீதிச்சண்டைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மைக்கோலிவ் நகரம் மீது ரஷ்ய விமானத் தாக்குதல்கள் நேற்றைய நாள் முழுவதும் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் உக்ரைனின் ஜனாதிபதி ஸெலன்ஸ்கி, ரஸ்யாவின் வங்கி இயக்கங்களை முடக்குமாறு சுவிட்சர்லாந்தை வலியுறுத்தியுள்ளார்.
நேற்று சுவிட்சர்லாந்து மக்களுக்கு உரையாற்றும்போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.
அத்துடன் தாமதமின்றி பேச்சுவார்த்தை மேசைக்கு வருமாறு அவர் ரஷ்யாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
எனினும் யதார்த்தமற்ற திட்டங்களுடன் வருவதன் காரணமாகவே சமாதான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின், ஜேர்மன் அதிபரிடம் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க உக்ரைனில் இருந்து 3.3 மில்லியனுக்கும் அதிகமான ஏதிலிகள் மேற்கு எல்லை வழியாக வெளியேறியுள்ளனர்.
உக்ரைன் வான் வெளியை உடனடியாக மூடுங்கள் என முன்னாள் மி
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள தொடக்கப் பாட
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட
ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
துபாயில் லண்டன் நகரில் ஓடும் டாக்சிகள் போல் புதிதாக அ
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடை
சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றும் மூன்று ரஷ்ய
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள்
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
