இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அந்த பயணம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது சம்பந்தமான எந்த காரணமும் இந்திய தரப்பில் இருந்து வெளியிடப்படவில்லை என அறியவருகிறது.
இந்திய பிரதமர் மோடி யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரவும், அதன் பின்னர் யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையத்தை திறந்து வைக்கவும் அதன் பின்னர் பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்றவும் திட்டமிடப்பட்டிருந்தது.
அத்துடன் பலாலி சர்வதேச விமான நிலையத்தை இந்திய பிரதமர் மோடி மீண்டும் திறந்து வைப்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இவ்வாறான நிலையிலேயே அவரது இலங்கை பயணம் இரத்துச் செயயப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கான பயணத்தை இரத்துச் செய்து விட்டு இணையத்தள தொழிற்நுட்பம் ஊடாக பிம்ஸ்டெக் மாநாட்டில் உரையாற்ற மோடி தீர்மானித்தள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக தகவல் வெளியிடுவதை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தவிர்த்துக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
கோழிப் பண்ணை தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக விளங்கு
இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மர
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த
காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் துப்பாக்கி குண
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு எம்.பி.யுமா
கடந்த 2 முறை சட்டமன்றத் தேர்தலிலும் திமுக ஆட்சியை க
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ராம்நாத் கோவிந்த் நேற்றுடன் 4
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ
உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி
அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசா
