More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • அசானி‛ புயல் நாளை உருவாகிறது! அந்தமானை தாக்க வாய்ப்பு.. பலத்த மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
அசானி‛ புயல் நாளை உருவாகிறது! அந்தமானை தாக்க வாய்ப்பு.. பலத்த மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை
Mar 20
அசானி‛ புயல் நாளை உருவாகிறது! அந்தமானை தாக்க வாய்ப்பு.. பலத்த மழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

அந்தமான் கடற்பகுதியில் நாளை ‛அசானி'புயல் உருவாகிறது. இதையொட்டி இடியுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோ



தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி தென்கிழக்கு வங்கக்கடல், பூமத்தியரேகையையொட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவி நகர துவங்கியது.



இது புயலாக உருமாறலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியது. மேலும் இது 2022ம் ஆண்டின் முதல் புயல் எனவும் தெரிவித்து இருந்தது.



அசானி’ புயல்



இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை புயலாகவும் வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உருவாகும் புயலுக்கு "அசானி" என பெயரிடப்பட்டுள்ளது.தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி அந்தமான் தீவை நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது. இதனால் அங்கு பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் புயல் உருவாவதையொட்டி அந்தமான் தீவுகளில் இன்று மித முதல் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அத்துடன் நாளை அந்தமான் தீவுகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த கனமழையும், நிகோபர் தீவுகளில் மிதமான மழையும் பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.நாளை உருவாகும் இந்த புயல் வலுவடைந்து வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து வங்கதேசம்,



வடக்கு மியான்மர் கடலோர பகுதியில் மார்ச் 22ல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தமான் கடல், அதையொட்டிய தென்கிழக்கு வங்ககடல் பகுதிகளுக்கு மீனவர்கள் யாரும் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து நடுக்கடலில் மீன்பிடித்த மீனவர்களுக்கு இந்திய கடற்படை சார்பில் விமானம், கப்பல்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. உடனடியாக கரை திரும்ப அறிவுரை வழங்கப்பட்டது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan18

ராமஜென்பூமி வழக்கில் உச்சநீதிமன்ற அளித்த தீா்ப்பின்

Mar05

தமிழகத்தில் திருநங்கையாக மாறிய மகனுக்கு அனைவர் முன்ன

May26

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர

Mar14

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

Mar04

ரஷ்யாவிடமிருந்து, 'எஸ் - 400' ஏவுகணை சாதனங்களை வாங்கும்

Apr23

இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்

May24

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்

Jan27

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ

Aug12

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்

Aug18

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை

Aug22

வேளாண் நிதிநிலை அறிக்கை அளித்தோம் என்று மார் தட்டி கொ

Feb06

 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க

Jan03

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்தம் எண்

Feb26

2007-ம் ஆண்டில் மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவி வ

May07

ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள லாச்சிரி கி

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:02 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Dec 01 (07:02 am )
Testing centres