உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி இராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், தொடர்ந்து 4 வாரங்களுக்கும் மேலாக அங்கு ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் ஆகிய நகரங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால், உக்ரைன் - ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகின்றது.
இந்நிலையில், உக்ரைன் படையினரின் கடும் எதிர்தாக்குதலால் ரஷ்ய படையினர் நாளாந்தம் பெருமளவில் கொல்லப்படுவதுடன் படை தளபாடங்களும் பெருமளவில் அழிக்கப்படுகின்றன.
உக்ரைனில் கொல்லப்படும் ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கையை மறைக்க இரவு நேரங்களில் அவர்களது சடலங்களை ஏற்றிய விமானங்கள்,ரயில்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் அண்டை நாடான பெலாரஸ்க்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
மார்ச் 13 வரை 2,500-க்கும் மேற்பட்ட வீரர்களின் சடலங்கள் Homel-ல் இருந்து ரஷ்யாவிற்கு ரயில்கள் அல்லது விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உக்ரைன் படையெடுப்பில் தமது தப்பில் 500 இற்கும் குறைவான படையினரே உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்து வரும் நிலையில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய படையினரை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வேலையின்மை வீதம் நவம்பர் ம
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும், தலீபான் பயங்க
இலங்கையில் தற்போதைக்கு கையிருப்பு முற்றாக காலியாகிப
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்க
பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி
அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்
பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெ
இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வ
ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு
எப்போதும் சினிமாவில் ஹீரோ ஹீரோயின் மட்டுமின்றி துணை ந
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 28 வது நாளாக போர் தொடுத்து
