உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவதுமாக சரணடையும் வேண்டும் என ரஷ்யா எச்சரித்திருந்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தங்கள் நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ள ரஷ்ய ராணுவ வீரர்களை உக்ரைன் பாதுகாப்பு படையினர் அதிரடியாக தாக்கி வருகின்றனர்.
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய ராணுவம் கடந்த சில வாரங்களாக சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலைக்குள் மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் ராணுவத்தினரும் தங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும் இல்லையேல் மிக தீவிரமான தாக்குதலை சந்திக்க வேண்டும் என்று வெளிப்படையாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது இருந்தது.
ஆனால் சரணடைவதற்கு உக்ரைன் அரசு முற்றிலுமாக எதிர்ப்பு தெரிவித்து, மரியுபோல் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்ற ரஷ்யாவின் சலுகையையும் மறுத்துவிட்டது.
மேலும் உக்ரைனின் மரியுபோல் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களின் டாங்கிகள் ராணுவ வாகனங்கள் என அனைத்தின் மீதும் உக்ரைன் பாதுகாப்பு படையினர் தீவிர எதிர்ப்பு தாக்குதல் தொடங்கியுள்ளனர்.
வெளியுறவுக் கொள்கை மையத்தின் இயக்குநர் லூக் காஃபி இந்த எதிர்ப்பு தாக்குதல் குறித்த வீடியோ ஆதாரத்தை அவரது ட்விட்டர் தளத்தில் வெளியீட்டு, இவர்கள் மரியுபோல் நகரின் பாதுகாவலர்கள் மற்றும் முழுமையான ஹீரோக்கள், இவர்கள் கண்டிப்பாக வரலாற்றில் இடம் பிடிப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர
அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில்
விளாடிமிர் புடின் உக்ரைனில் தனது ரஷ்யப் படைகளால் நடத்
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி,
பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச
அமெரிக்கா, ஆபிரிக்கா நாடுகள் தவிர்த்து உலகமெங்கும் கொ
சோமாலிய பிரபல ஊடகவியலாளர் ஒருவர் அந்த நாட்டு தலைநகர்
ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவ
இங்கிலாந்து
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14- துருக்கி மால் ஒன்றில், செல்போன் பார்த்தப்படியே நடந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹோப் விண்கலம் வெற்றிக்கரமாக ச கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட உக்ரைன் அசோவ்ஸ்டல் இரும்பு ஆலையில் ரஷ்ய படையினரின் மு
