உக்ரைனின் கார்க்கிவ் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதல் உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில்-ரஷ்யா 26 நாள்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் நிலையில், அந்த நாட்டை முழுமையாக கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கில் ரஷ்ய ராணுவம் முழு மூச்சியில் தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.
நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் முழுமையாக முடிவடைந்து இருப்பினும், இதுவரை போரை நிறுத்துவது குறித்த எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை, இதனைதொடர்ந்து இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவங்களை ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி மாறிமாறி எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவ்-வில் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் வரிசையில் காத்துக்கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ராணுவம் ஷெல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்கள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் மத்தியில் பெரும் கண்டனம் எழுந்துள்ளது.
மேலும் இந்த தாக்குதல் குறித்த cctv வீடியோ காட்சி சமூகவலைத்தளத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/i/status/1505839896426074113
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இன்ஜினிட்டி என்ற சிறிய
மும்பையை சேர்ந்தவர் இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகீர் நாயக
"மனித உரிமைகள் மீதும், மனிதநேயத்தின் மீதும் தாக்குதல
உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர
சீனாவின் தெற்கு குவாங்சி மாகாணத்தில் கடந்த மார்ச் மாத
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இஸ்ரேல் 34வ
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட், ( Naftali Bennett ) ரஸ்ய ஜனாதிபதி
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா
மியன்மாரில் இராணுவ ஆட்சி தோல்வியடைய, ஐ.நா சபையால் என்ன
இந்தியா - பாகிஸ்தான் இடையே 2003-ம் ஆண்டு சண்டை நிறுத்த ஒப்
அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின், முதல் 100 நாட்களில் 10 கோ
