உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதல் 27-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் அரசு கட்டிடம் முதல் மருத்துவமனை, பள்ளி என எதுவும் தப்பவில்லை. பெரியோர் முதல் குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரஷியாவின் தாக்குதலில் அதிக அளவில் சேதமடைந்த நகரில் கார்கிவ் நகரும் ஒன்று. இங்குள்ள மகப்பேறு மருத்துவ மையத்தில் இரினா என்ற பெண் மருத்துவர் தலைவராக உள்ளார். இவரிடம் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது இன்ஸ்டராகிராம் கணக்கை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘இன்று (16 மணி நேரத்திற்கு முன்பு) நான் எனது சமூக சேனல்களை இரினாவிடம் வழங்குகிறேன். இவர் கார்கிவ் மாகாணத்தில் உள்ள மண்டல மகப்பேறு மையத்தின் தலைவராக உள்ளார். உக்ரைனில் உள்ள கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறார். உக்ரைனில் உயிர்களை காப்பாற்ற இரினா மற்றும் சுகாதார ஊழியர்கள் செய்யும் வரும் அற்புதமாக பணியை மேலும் வெளிப்படுத்த எனது ஸ்டோரி உதவியாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
பாகிஸ்தானின் பெஷாவர் நகர் அருகே அந்நாட்டு விமானப்படை
உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க
பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர
ஜெர்மனி, பெல்ஜியம் நாடுகளில் தொடர் கனமழை காரணமாக ஏற்ப
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க
கொரனாவால் கடந்த 2 ஆண்டுகளாக உலகமே முடங்கிய நிலையில், தற
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்ப
உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசிய
ஜப்பானை தடம் புரட்டிய சக்தி வாய்ந்த புயலால் குறைந்தது
யுக்ரைனில் - ரஷ்யா போர்நிறுத்தம் ஏற்படும் என்ற நம்பிக
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி போரை தொடங்க
ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான
போலாந்தில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கும் வகையில
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்
