ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக போர் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷ்யா போரை நிறுத்தவில்லை.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷ்யாவுக்கு எதிராக உள்ளது.
இந்நிலையில், ரஷ்யா நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்க முடியாது என செர்பிய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் அலெக்சாண்டர் வுலின் கூறுகையில், ரஷ்ய குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் சொத்துக்கள் திருடப்படும் ரஷ்ய எதிர்ப்பு வெறியின் ஒரு பகுதியாக செர்பியா ஒருபோதும் இருக்காது.
ரஷ்யா நாட்டின் மீது எங்களால் பொருளாதார தடைவிதிக்க முடியாது. ரஷ்ய ஊடகங்களை நாங்கள் தடைசெய்ய மாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையில் உலக நாடுகள் ரஷ்யாவை புறக்கணிக்கும் நிலையில், செர்பியா ரஷ்யவின் பிரபல கேஸ் நிறுவனமான காஸ்ப்ரோம் உடன் ஒரு புதிய எரிவாயு ஒப்பந்தத்தை செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று நாட்டு மக்களிடம் உரை
இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் கடும் பனிப
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்
அமீரகத்தில் சுத்தம் செய்யப்படாத ஏ.சி. எந்திரங்களால் ப
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சு
உலக நாடுகளுக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று
அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு
ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி அரசு படைகளுக்கும் ஹ
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
இன்னும் 20 ஆண்டுகளில் பிரித்தானியாவில் பிறக்கும் கால்