இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!
Mar26
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ குடும்பத்தினரும் சார்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சிறிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 63 சிறிய விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது.