உக்ரைன் போரில் இதுவரை 7 ரஷ்ய ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் என்று மேற்கத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை உக்ரைனில் நடக்கும் போரில் இதுவரை ஏழு ரஷ்ய ஜெனரல்கள் கொள்ளத்தனர் மற்றும் மற்றொருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.
சமீபத்தில் ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தில் 49-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ஸ்டெவ் (Yakov Rezanstev) இறந்தார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், 6-வது ஒருங்கிணைந்த ஆயுத இராணுவத்தின் ரஷ்ய இராணுவத் தளபதி ஜெனரல் விலைஸ்லாவ் யெர்ஷோவ் (Vlaislav Yershov), இந்த வார தொடக்கத்தில் கிரெம்ளினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என தெரிவித்தனர்.
ரஷ்ய இராணுவம் அதன் அண்டை நாடான உக்ரைன் மீதான ஒரு மாத காலப் படையெடுப்பின் போது காணப்பட்ட பெரும் இழப்புகள் மற்றும் மூலோபாய தோல்விகள் காரணமாக அவர் திடீரென நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மற்றவர்களில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினால் உக்ரைனில் நிறுத்தப்பட்ட செச்சென் சிறப்புப் படையைச் சேர்ந்த ஜெனரல் மாகோமட் துஷேவ்வும் (Magomed Tushaev) அடங்குவார்.
ஒரு மாத காலப் போரில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் எண்ணிக்கை மேற்கத்திய இராணுவம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன
புதிய வகை கொரோனாத் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தென் ஆ
கிழக்கு லடாக் பகுதியில் எல்லை பிரச்சினை காரணமாக இந்தி
சீனாவின் உகான் நகரில் இருந்து கடந்த 2019ம் ஆண்டு கடைசியி
சீனாவில் பெய்து வரும் தொடர் மழையால் பல லட்சம் மக்கள் ப
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா, அந்நாட்டின் 4 நகரங
தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை ச
ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற ம
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியா
உலக அளவில் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் வந்து கொண்டு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதங்களைக் கடந்த