உக்ரைனின் மரியுபோல் நகரின் இன்றைய நிலையை வெளிப்படுத்தும் புகைப்படம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
அதேசமயம் உக்ரைனின் மரியுபோல், கெர்சன் நகரங்களில் தொடர்ந்து மோதல் இடம்பெற்று வருகிறது.
மரியுபோல் நகரில் மோதல் தீவிரமடைந்துள்ளதால், நகர மக்கள் தண்ணீர், மின்சாரமின்றி தவித்துவருகின்றனர்.
4 லட்சம் பேர் மரியுபோல் நகரில் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ள உக்ரைன் அரசு, அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மனிதாபிமான வழித்தடங்களை திறக்குமாறு ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, மரியுபோல் நகர வாசிகளை தங்கள் நாட்டிற்கு ரஷ்ய படைகள் நாடு கடத்தி வருவதாகவும், நகரல் குடியிருப்பு பகுதிகளில் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் தரப்பில் குற்றம்சாட்டுப்பட்டுள்ளது.
மேலும், மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டர் மீது ரஷ்ய குண்டு போட்டதில் 300 பேர் கொல்லப்பட்டனர்.
அதுமட்டுமின்றி, மரியுபோலில் உள்ள பிரசவ மருத்துவமனை மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்திய சம்பவமும் சர்வதேச அளிவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரஷ்ய தாக்குதலில் சிதைந்து கிடக்கும் மரியுபோல் நகரின் புகைப்படும் இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில், நகரம் முழுவதும் சிதைந்து, கட்டிடங்கள் நொறுங்கி, ஆங்காங்கே கரும் புகை வருவதை காட்டுகிறது.
ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச
இந்தியா - அமெரிக்க வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறை
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர
காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர
வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சி தலைமையில் ஆட்சி நடக்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை
தன்னை விமர்சித்து கட்டுரை எழுதிய பெண் நிருபரை, அமெரிக
மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கிய நிலையில் ரஷ்ய இராணு
இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்ப
