அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ளன. ஆனால் இந்த தகவல் பொய்யில்லை. ஒரே வீட்டில் இவர்கள் அனைவரும் வசித்து வருவதாக கூறப்படுகின்றமை நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர்.
இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி) செலவு செய்துள்ளனர்.
இந்நிலையில் கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.
கிறிஸ்டினாவின் 22 குழந்தைகள் மற்றும் காலிப், அவரது முன்னாள் மனைவி மூலமாக பெற்ற 6 வயது மகள் உள்பட தற்போது ஒரே வீட்டில் 23 குழந்தைகள் வசித்து வருகின்றன.
இதுகுறித்து கிறிஸ்டினா கூறுகையில், நான் எப்போதும் குழந்தைகளுடனே இருக்கிறேன். ஒரு தாய் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், ஒரேயொரு வேறுபாடு என்ன என்றால், குழந்தைகளின் எண்ணிக்கை தான் என மகிழ்வுடன் கூறுகின்றாராம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலுாரில் ஓவிய ஆசிர சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக் பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர அமெரிக்காவில் நாயின் கழுத்தில் பாய்ந்த அம்பை கால்நடை வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள பங்களாதேசில் நடைபெறவுள்ள கபடிப் போட்டியில் பங்குபற்
