கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் தனது அண்ணன்கள் இருவருடன் சேர்ந்து கணபதி வரதராஜுலு நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இரண்டு ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.ஆனால் அந்த பெண் இரண்டு வருடமாக பேசுவது இல்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே பாரதிராஜா ஆன்லைன் ஆப் மூலம் ரு.12 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். வாங்கி கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்துள்ளார்.
ஆனால் ஆப் நிறுவனத்தில் இருந்து கடன் தொகையை கட்ட சொல்லி தொடர் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. காதலிக்கும் பெண்ணும் பேசாத காரணத்தால் மன உளைச்சலில் இருந்து வந்த பாரதிராஜா கடன் தொகை வசூலிக்கும் நிறுவனம் மிகுந்த டார்ச்சர் செய்த காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளானார்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான பாரதிராஜா வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார் பாராதிராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்த
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
டெல்லியில் விவசாயிகளின் டராக்டர் பேரணியில் நிகழ்ந்த
தமிழகத்தில் முதல்முறையாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ம
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
இலங்கையில் புதிய பிரதமரின் நியமனத்துக்கு சமாந்தரமாக
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், திமுக தலைவர
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த
நேர்மையாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தால் அதிமுக வெ
இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த
