ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடரும் நிலையில், தற்போது கோவில்களுக்கு அருகே இந்துக்கள் அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டத்தில் கவுப் மாரிகுடி திருவிழாவின் போது, இந்து அல்லாத வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து படுபித்ரி கோவில் திருவிழாவிலும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஓரிரு கோவில்களிலும் இதேபோன்ற பேனர்கள் காட்டப்பட்டிருந்தன.
இந்த எதிர்ப்பு தற்போது அம்மாநிலத்தின் மாண்டியா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, துமகுரு மற்றும் ஹாசன் போன்ற பகுதிகளிலும் பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி கோவில் அருகே முஸ்லிம் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மைசூரு பிரிவு, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சினை கர்நாடகா சட்டசபையில் எழுப்பப்பட்ட நிலையில், கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள தெருவோரங்களில் கடை வைத்திருக்கும் இந்து அல்லாத வியாபாரிகளுக்கு இது பொருந்தாது என்றும், அவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடகா மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நா
பேஸ்புக்கை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படு
கரீபியன் தீவுகளில் ஒன்றான ஹைதியில் கடந்த 14-ம் தேதி கால
உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழ
மதிப்பிலான சரக்குகளுடன் மலேசியா வழியாக நெதர்லாந்து ந
ஆப்பிரிக்காவில் பெண்ணை கொன்ற ஆட்டிற்கு சிறை தண்டனை வி
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவெல்னிக்கு மூன்ற
பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து
உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்
உக்ரைன் மீது ரஷ்யா 14 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நர்ஸ் ப
மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்ற
