பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எதிர்பாராத விதமாக ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தனது சொந்த ஊரான பாட்னாவில், பக்தியார்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்து கொண்டார்.
இதனையடுத்து, அங்குள்ள சபார் மருத்துவமனை வளாகத்தில், விடுதலை போராட்ட வீரர் ஷில்பத்ரா யாஜியின் சிலையை முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைத்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து நிதிஷ்குமாரை தாக்கினார். உடனே பாதுகாவலர்கள் அவரை மடக்கி தர்ம அடி கொடுத்தனர். உடனே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அவரை யாரும் அடிக்காதீர்கள்.. அவன்ன என்ன சொல்கிறார் என்பதை முதலில் கேளுங்கள்... என்று கூறினார்.
இது குறித்து போலீசார் முதற்கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில், தாக்குதல் நடத்தியவரின் பெயர் சங்கர் ஷா என்பது தெரியவந்தது. அவருக்கு மன நல பாதிப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம
காஷ்மீரின் ஜம்முவில் உள்ள விமானப் படைதளத்தில் டிரோன்
தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சின
திருப்பதி அருகே உள்ள புங்கனூர் அலிபிரி சாலையை சேர்ந்த
தனது செல்ல நாயுடன் உக்ரைனில் இருந்து நாடு திரும்பியுள
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள