ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறியதற்கு, தனது தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (27-03-2022) நேட்டோ நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது ஜோ பைடன் பேசுகையில்,
கடவுளின் பொருட்டு இந்த நபர் (புடின்) அதிகாரத்தில் நீடிக்க கூடாது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி. அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர். நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புடின் முயற்சிக்கிறார்.
ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக உள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று பட்ஜெட் முன்மொழிவை வெளியிட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நான் எனது கருத்துகளுக்கு பின்வாங்கவில்லை. நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கவில்லை.
விளாடிமிர் புடின் அதிகாரத்தில் இருக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியும், கெட்டவர்கள் தொடர்ந்து கெட்ட செயல்களை செய்யக்கூடாது.” என்று ஜோ பைடன் கூறினார்.
அமெரிக்கா, கனடா, பெல்ஜியம் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில
ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவா
தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக
சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் பெய்து வரும் கனமழைய
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. பல்வேறு ந
ஐதராபாத்தை சேர்ந்த அசாதுதின் ஓவைசி, மஜ்லிஸ் முஸ்லிமின
மராட்டிய மாநிலம் நாக்பூர் மற்றும் மாநிலத்தின் சில இடங
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர்
உக்ரைன் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்திற்கு மத்
பிலிப்பைன்சின் மத்திய பகுதியில் செபு மாகாணத்தின் மாக
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம
அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர
உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
