இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு, உதவிகளை செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, இந்திய மத்திய அரசாங்கத்திடம், தமிழக மாநில அரசு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, (Narendra Modi) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (M. K. Stalin) டெல்லியில் நேற்று வியாழக்கிழமை (31-03-2022) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே இந்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும், உயிர் காக்கும் மருந்து வகைகளை பெற்றுக்கொடுக்கவும் அனுமதி வழங்குமாறு, மு.க ஸ்டாலின், பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
மேலும், இலங்கை − இந்திய மீனவ பிரச்சினைக்கான தீர்வு மற்றும் கச்சத்தீவை மீட்டெடுப்பது தொடர்பிலும் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமரிடம் கோரியுள்ளார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5
உலகம் முழுவதையும் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் த
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
வடசென்னையில் அயோத்திதாசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் எழுந்துள்ள மோசமா
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாள் இன்று க
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் ஆகஸ்ட் 13ம் தேதி திமு
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால
இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புதிய கடன்களை பெற்ற
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரியில் நடந்த வன்முறை த
மங்களூருவில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி மலபார் எக
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக்
