ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அந்த நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி ரஷ்ய எச்சரிக்கை விடுத்துவருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவிடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவல் அளித்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைன் வீரர்களின் அத்தகைய சரணைடைதல் இன்றுவரை நடைபெறாவிட்டாலும், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த திட்டத்தால் உக்ரைன் வீரர்களை மறைமுகமான வழியில் விரைவில் சரணடைய வைக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், விரைவில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது மனித உரிமை விதிமீறல்களில் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உக்ரைனில் மனித உரிமை மீறல்களில் விரைவில் ரஷ்யா மேற்கொள்ளலாம் என தானும் நம்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்க ரஷ்யா போலியான பிரச்சாரத்தில் இறங்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
மரணம் நெருங்கும் போது, அந்த நேரத்தில் ஒருவர் மனதில்
உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் 5 வயது சிறுவன் அடித்ததில்,
உக்ரைன் ராணுவ வீரர்களிடம் கைப்பற்றிய டாங்குகள் மூலம்,
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
இந்து சமுத்திர பிராந்தியத்தில் தமது நலனை அடைவதற்கு ரஷ
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
