ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைனை ரஷ்யா அனைத்து பக்கங்களில் இருந்தும் தீவிரமாக தாக்கி வரும் நிலையில், அந்த நாட்டு ராணுவ வீரர்களை உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையும் படி ரஷ்ய எச்சரிக்கை விடுத்துவருகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவிடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் குடும்பங்களை தாக்கி அழிக்க ரஷ்யா திட்டமிட்டு இருப்பதாக அமெரிக்காவின் உளவுத்துறை தகவல் அளித்து இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைன் வீரர்களின் அத்தகைய சரணைடைதல் இன்றுவரை நடைபெறாவிட்டாலும், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த திட்டத்தால் உக்ரைன் வீரர்களை மறைமுகமான வழியில் விரைவில் சரணடைய வைக்கும் முயற்சியில் ரஷ்யா இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், விரைவில் ரஷ்ய ராணுவம் உக்ரைன் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மீது மனித உரிமை விதிமீறல்களில் இறங்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து உக்ரைனில் மனித உரிமை மீறல்களில் விரைவில் ரஷ்யா மேற்கொள்ளலாம் என தானும் நம்புவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனியர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரிக்க ரஷ்யா போலியான பிரச்சாரத்தில் இறங்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்
தங்கம் விலையானது இன்றைய வாரத்தில் ஏற்றம் இறக்கம் கண்ட
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
உக்ரைய்ன் மரியுபோலில் நகரில் போர் நிறுத்தத்தை அறிவித
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய
இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறி
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
