More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • 8வது நாளில் ரஷ்ய- உக்ரைன் போர்... நெஞ்சை உலுக்கும் ஒற்றைப் புகைப்படம்
8வது நாளில் ரஷ்ய- உக்ரைன் போர்... நெஞ்சை உலுக்கும் ஒற்றைப் புகைப்படம்
Mar 04
8வது நாளில் ரஷ்ய- உக்ரைன் போர்... நெஞ்சை உலுக்கும் ஒற்றைப் புகைப்படம்

உக்ரைன் நகரங்களில் தொடர்ந்து வான் தாக்குதலை ரஷ்ய துருப்புகள் முன்னெடுத்துவரும் நிலையில், வெளியான ஒற்றைப் புகைப்படம் பார்ப்பவர்கள் நெஞ்சை உலுக்கியுள்ளது.



உக்ரைனின் மரியுபோல் நகரில் 24 மணி நேரத்திற்கும் மேலாக ரஷ்ய துருப்புகள் கடுமையான தாக்குதலை முன்னெடுத்து வருகிறது. அந்த நகரத்தை மொத்தமாக ரஷ்ய துருப்புகள் சிதைத்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.



இது திட்டமிட்ட இன அழிப்பு என உக்ரைன் மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இந்த நிலையில், மரியுபோல் நகரில் ரஷ்ய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட தமது இளவயது மகனின் சடலத்தை அள்ளி அணைத்தபடி கதறும் தந்தை ஒருவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி கலங்க வைத்துள்ளது.



கால்கள் இரண்டும் பிய்ந்துபோன நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அந்த இளைஞரின் சடலம். குறித்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.



வெளியாகியுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இரத்தவெறியை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டுவதாகவே அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.



சம்பவத்தின் போது 15 அல்லது 16 வயதுடைய மூவர் காலபந்து விளையாட்டில் பொழுதைக்கழித்துக் கொண்டிருக்கையில் ரஷ்ய துருப்புகளின் வான் தாக்குதல் நடந்துள்ளது. இதில் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்ட நிலையில், சம்பவயிடத்திலேயே ஒருவர் இறக்க, எஞ்சிய இருவரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளனர்.



மரியுபோல் நகரில் இருந்து பொதுமக்களை வெளியேற விடாமல் திட்டமிட்டே இன அழிப்பை முன்னெடுத்து வருவதாக ரஷ்ய துருப்புகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் நகர மேயர் Vadym Boychenko.



நகரின் கட்டிடங்கள் மொத்தம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், பலர் காயங்களுடன் தப்பியுள்ள நிலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களில் பெண்கள், சிறார்கள் மற்றும் முதியவர்களே அதிகம் என நகர மேயர் Vadym Boychenko தெரிவித்துள்ளார்.



உக்ரைன் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தான் மரியுபோல் நகரம் இன்னமும் உள்ளது என குறிப்பிட்டுள்ள Vadym Boychenko, இறுதி மூச்சு வரையில் நகரை காப்பாற்ற உக்ரைன் துருப்புகள் போராடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அதிவேகத்தில் செல்லும

Mar08

  தென்கொரிய ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத்தின் போது

Aug27

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தை கட்டுப்

Mar04

உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) மேற்கத்த

Aug31

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  இன்று நாட்டு மக்களிடம் உரை

Feb20

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட

Aug22

மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது

Oct01

ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவு

May30

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தபோது பல நா

May12

வட கொரியா தனது முதல் கொரோனா தொற்றுப் பரவலை இன்று உறுதி

May24

  உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ

Apr23

இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமானது நீர்மூழ

May25

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச

Jun17

இரும்புத்திரை நாடாக உள்ள வடகொரியாவில் என்ன நடக்கிறது

Mar06

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (07:39 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jul 16 (07:39 am )
Testing centres